சென்னை : அஞ்சல்துறை தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எழுத்துபூர்வ உத்தரவாதத்தை சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சர் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சமீபத்தில் அஞ்சல்த்துறை தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது