மதுரை: மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமனம் எதன் அடிப்படையில் நடைபெற்றது?, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளதா? இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமன பட்டியலை ரத்து செய்ய மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை ரவிக்குமார் எனபவர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.