சென்னை: சென்னை எண்ணுரில் அனல்மின் நிலையம் கட்டுமான பணிக்காக வைத்திருந்த ராட்சத பிளாஸ்டிக் உருளைகள் தீப்பற்றி எரிந்ததால் கரும்புகை சூழ்ந்தது. இதை தொடர்ந்து சென்னை எண்ணூர் பர்மா நகர் அருகே காலி மைதானத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்றிரவு திடீரென அக்குழாய்கள் தீப்பற்றி வானுயர எரிந்தது. இதன் காரணமாக அருகே உள்ள வீடுகளில் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். இதை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். எனினும் பிளாஸ்டிக் உருளைகள் அடுக்கடுக்காக இருப்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் உதிவியுடன் நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.