சென்னை: மாநில அரசு அனுமதியின்றி மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்த முனைந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடமுண்டு என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை, கொள்கை முடிவு எடுக்கவில்லை என்றெல்லாம் திமுக தரப்பில் தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்து வந்த நிலையில் தற்போது மிக முக்கியமான ஒரு கருத்தை சி.வி.சண்முகம் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ஹைட்ரோகார்பன் திட்டத்தை தொடர்ச்சியாக மாநில அரசு அனுமதியில்லாமல் மத்திய அரசு அந்த திட்டத்தை செயல்படுத்த முன்வந்தால் நிச்சயமாக கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கும் அந்த சட்டத்தில் இடம்முள்ளதாகவும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தின் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சி.வி.சண்முகம் பதிலளித்துள்ளார். மேலும் இதுவொரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.