சென்னை: சென்னை நந்தனம் அருகே இருசக்கர வானம் மீது மாநகர பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து சென்னை நந்தனம் அருகே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். மேலும் இதில் வாகனம் ஓட்டி வந்த சிவா என்பவர் தலைக்கவசம் அணிந்துள்ளார். மேலும் பின்னால் பவானி மற்றும் நாகலட்சுமி ஆகிய இரண்டு பெண்களும் அமர்ந்திருக்கின்றனர். இவர்கள் மூன்று பேரும் வேகமாக மாநகர பேருந்தை முந்தி செல்வதற்காக முயற்சித்துள்ளனர். அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் அவர்களது வலதுபுறம் மாநகர பேருந்தும் இடதுபுறம் மற்றோரு இருசக்கர வாகனமும் வந்து கொண்டிருக்கின்றது. மேலும் அவர்கள் அருகில் வந்த இருசக்கர வாகனத்தில் லேசாக மோதியதால் நிலை தடுமாறி சிவா, நாகலட்சுமி மற்றும் பவானி ஆகிய மூன்று பேரும் மாநகர பேருந்தின் முன்புறமாக கீழே விழுகின்றனர்.