கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் 46வது ஆண்டு தேர் திருவிழா ஜூலை 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நாள்தோறும் ஆலயத்தில் பங்குதந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை நேரங்களில் தேவாலயத்தை சுற்றி சிறிய தேர் பவனி நடைபெற்று வந்தது. தேர்த்திருவிழாவின் கடைசி நாளான நேற்று காலை 8 மணிக்கு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருபலி நடைபெற்றது.