சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை அருகில் தொழிற்சங்க அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று காலை அம்மா மாளிகை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சங்க அலுவலக மேற்கூரையில் ஒருவர் படுத்திருந்ததை பார்த்த துப்புரவு பணியாளர் மதுபோதையில் இருப்பதாக நினைத்து அவரை கீழே இறங்கும்படி சத்தம் போட்டனர். ஆனால் அவரிடமிருந்து பதில் மற்றும் உடலில் எந்த அசையும் இல்லதாதல் சந்தேகத்தின்பேரில் மேலே சென்று பார்த்தனார். அப்போது அவர் கழுத்தில் ஒயரால் இழுக்கப்பட் நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.