தாம்பரம்: தாம்பரம் அடுத்த இரும்புலியூர், சதானந்த பாரதியார் தெருவை சேர்ந்தவர் வீரேந்தர் ஜெயின் (38). இவர் அதே பகுதியில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஹைதராபாத் சென்றிருந்தார். நேற்று காலை வழக்கம் போல் கடைக்கு சென்ற வீரேந்தர் ஜெயின், மதியம் வீட்டிற்கு சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.