கோவை: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நேற்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கோவை உக்கடம் அன்பு நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (27), வின்சென்ட் ரோட்டை சேர்ந்தவர் முகமது உசேன் (30), கரும்புக்கடையை சேர்ந்தவர் சேக் ஷபியுல்லா (27). இவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக கடந்த 12ம் தேதி கோவை போத்தனூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் படி (உபா) நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்கள் கைது செய்யப்பட்டு ேகாவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கையில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியுடன் ஷாஜகான் பேஸ்புக்கில் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.