மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், நாராயணத்துவிளைவீடு பகுதியைச் சேர்ந்த பிஜூலால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விளவங்கோடு தாலுகா களியல் கிராமத்திலுள்ள ஊரணியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதை அளவீடு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.