ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைப்பகுதியில் ஆயிரக்கணக்கான பறவைகள் தஞ்சம் அடைந்துள்ளன. அவை வானில் பறக்கும் காட்சி அப்பகுதி மக்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்தேக்கப்பகுதி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நீலகிரி கிழக்கு சரிவு வனப்பகுதி ஆகியவற்றை ஒட்டி அமைந்துள்ளதாள் வன விலங்குகள் தண்ணீர் தேடி அணைப்பகுதிக்கு வருவது வழக்கம்.