விழுப்புரம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் தன்னெழுச்சியாக 3 லட்சம் பேர் பங்கேற்றனர். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான அனுமதி ரத்து, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சுமார் 600 கிலோமீட்டர் நீளத்திற்கு மக்கள் கரம் கோர்த்து நின்ற இந்த போராட்டத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் இடதுசாரி கட்சியினர் பங்கேற்றனர். இதை தொடர்ந்து விளைநிலங்கள் வீணாவதை தடுக்கவும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.