சென்னை: தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி. வி.ஆர்.லட்சுமிநாராயணன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். சென்னை அண்ணாநகர் 3வது முதன்மை சாலை 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வி.ஆர்.லட்சுமி நாராயணன் (91). இவர் தமிழக கேடரில் கடந்த 1951ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக மதுரையில் தனது பணியை தொடர்ந்தார். பின்னர் காவல் துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த அவர் தமிழக சட்டம் ஒழுங்க டிஜிபியாகவும் பணியாற்றினார்.