திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, தனியார் சிலர் பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் இந்த பன்றிகளை வீட்டில் வைத்து வளர்க்காமல் வெளியே திரிய விடுகின்றனர். இதனால் பன்றிகள் தெருவில் ஆங்காங்கே தேங்கும் குப்பையை கிளறி, அதில் உள்ள உணவு கழிவுகளை சாப்பிட்டு வருகின்றன. மேலும், தண்ணீர் தேங்கும் இடங்கள் மற்றும் கால்வாய்களில் கூட்டமாக இறங்கி சகதியாக மாற்றுகின்றன. பின்னர், தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தெருவில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதுசம்மந்தமாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், சமீப காலமாக சாலையில் நடந்து செல்பவர்களை இந்த பன்றிகள் விரட்டி கடிப்பதால், பீதியுடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் விம்கோ நகரை சேர்ந்த பிரியா (35) என்பவர் நேற்று முன்தினம் மாலை விம்கோ நகர் ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றபோது, தெருவோரத்தில் சுற்றிக்கொண்டிருந்த பன்றி, பிரியாவின் காலை கடித்தது.