சென்னை: குளிர்பானத்தில் சாக்லெட் கவர் இருந்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தனியார் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் ₹35 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 2011ம் ஆண்டு ஹாரிஸ் சாலையில் உள்ள பேக்கரியில் ₹9 கொடுத்து கூல்டிரிங்ஸ் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை குடிக்கும்போது, பாட்டிலில் சாக்லெட் கவர் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக்திவேல் பேக்கரி உரிமையாளரிடம் கேட்டபோது, அவர் தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், கூல்டிரிங்ஸ் காலாவதி தேதியும் சரியாகதான் இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சக்திவேல் உரிய இழப்பீடு கோரி பிரபல கூல்டிரிங்ஸ் நிறுவனம் மீது, சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.