சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை 7 மற்றும் 8ம் தேதிகளில் முக்கிய விழாக்களான தேர்த்திருவிழா, ஆனித்திருமஞ்சன தரிசன விழா ஆகியவை நடக்கிறது. இதனையொட்டி நடராஜர் கோயிலுக்கு நேற்று மதியம் கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் வருகை தந்தார். கோயிலில் மக்கள் கூடும் இடங்களான நடனபந்தல், ஆயிரங்கால் மண்டபம் ஆகிய இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார்.