கும்பகோணம்: மழை வேண்டி நேற்று அதிமுக சார்பில் கோயில்களில் யாகம் நடந்தது. கும்பகோணம் கும்பேஸ்வரன் கோயிலில் நேற்று காலை யாகம் நடந்தது. இதில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். யாகம் நடந்து கொண்டிருந்த நிலையில், கொடிமரம் அருகே ஒரு பசுவும், கன்றுவும் கொண்டுவரப்பட்டு கோ பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோயிலில் 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தை பார்த்ததும் அந்த பசு மிரண்டது.அமைச்சர் துரைக்கணணு பசுவை தொட்டு வணங்கி கோபூஜை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அவர் பசுவை நோக்கி சென்றபோது அவரை தொடர்ந்து அதிமுக தொண்டர்களும் சென்றர்.