கடற்கரை - வேளச்சேரி இடையே மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை- வேளச்சேரி இடையே  இன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே இன்று காலை 7.50 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 8.10 மணி முதல் பிற்பகல் 2.35 மணி வரை இயக்கப்படும் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து சென்னை கடற்கரை- வேளச்சேரிக்கு முதல் ரயில் பிற்பகல் 2 மணிக்கும், வேளச்சேரி- சென்னை கடற்கரைக்கு முதல் ரயில் பிற்பகல் 2.10 மணிக்கும் இயக்கப்படும்.

மேலும் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இன்று இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இன்று இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: