சென்னை,: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் (கிரேடு1) முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு நாளை 121 மையங்களில் நடக்கிறது. இதில் 30 ஆயிரம் பேர் கணினி மூலம் தேர்வு எழுதுகின்றனர். அரசுப் பள்ளிகளில் 2018-2019ம் ஆண்டில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர்(கிரேடு1) பணியிடங்களில் முதுநிலை ஆசிரியர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 1ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வு எழுத 30 ஆயிரத்து 831 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 7545 பேர் ஆண்கள், 23 ஆயிரத்து 286 பேர் பெண்கள். மாற்றுத் திறனாளிகள்் 322 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான ஹால்டிக்கெட்டுகள் கடந்த வாரம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.