பெருந்துறை: பெருந்துறை அருகே சித்தன்குட்டையில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவை ராசிபாளையம் முதல் தருமபுரி பாலவாடி வரை செல்லும் 400 கிலோவாட் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சேலம் மற்றும் கோவை மண்டல பொது கட்டுமான வட்டத்தில் மொத்தம் 562 மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. சேலம் மண்டலத்தில் 280 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் ஈரோடு மாவட்டத்தில் இன்னும் 40 கோபுரங்கள் மட்டுமே அமைக்கும் வேண்டி உள்ளது. இந்நிலையில், நேற்று காலை பெருந்துறை அருகே சித்தன்குட்டையில் கீதாபூபதி என்பவரின் நிலத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் அருளரசு, உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மின் பணியாளர்கள் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.