பல்லாவரம்: பம்மல் பகுதியில் உள்ள பர்னிச்சர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. பம்மல் அண்ணா சாலையில் தனியாருக்கு சொந்தமான பர்னிச்சர் கம்பெனி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கம்பெனியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சுப் பொருட்கள் மீது எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது. ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. காற்றில் தீ மளமளவென பரவி கம்பெனி முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால், அங்கிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.