சென்னை: பம்மல் நாகல்கேணியில் உள்ள அஸ்தர் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அஸ்தர் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் 18 ஊழியர்களுடன் இன்று காலை வழக்கம் போல் வேலை நடைபெற்றது. இந்த சமயத்தில் மதியம் 1 மணி அளவில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து கடந்த 1 மணி நேரமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.