ராஞ்சி: யோகாவின் பயன்களை அனைவரும் ஒன்றினைந்து பரப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைப்பதாக தெரிவித்தார்.