கொள்ளிடம்: நாகை அருகே அதிகாரிகள் அலட்சியம் காரணமாக உடைந்த குழாயில் இருந்து 2 மாதமாக குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த ஓலையாம்புத்தூர் நடுநிலைப்பள்ளி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் செல்லும் குழாய் செல்கிறது. வடரெங்கத்திலிருந்து கூட்டு குடிநீர்த்திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சக்தி வாய்ந்த மின்மோட்டார்கள் மூலம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் கடற்கரையோரமுள்ள கிராமங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த குழாய் மூலம் குன்னம், பெரம்பூர், ஓலையாம்புத்தூர், கீழமாத்தூர், அரசூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக எடுத்துச்செல்லப்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.