ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் இருந்து தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அரசு தடை விதித்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதித்தது. ஆவடி மாநகராட்சி ஆணையர் ஜோதிகுமார் உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர்கள் ஜாபர், பிரகாஷ், சந்திரன், சிவகுமார் ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆவடி பகுதிகளில் ஆய்வு செய்தனர்.