சென்னை: உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்தது பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, எஸ்.எல்.ஆர் கேம்ப், பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா (59). இவர், நேற்று முன்தினம் தன்னுடைய உறவினர் திருமணத்திற்கு மேட்டுப்பாளையம் செல்ல இரவு 8.30 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற குடும்பத்துடன் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். பின்னர் ரயிலுக்காக காத்திருந்தபோது திடீரென சரோஜா மயங்கி விழுந்துள்ளார்.