சென்னை: பட்டிமன்ற பேச்சு மட்டுமல்ல ஐடியாக்களையும் அள்ளி வீசுகிறார் பாஜ தலைவர் தமிழிசை. தற்போது தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் தமிழகம் திணறி வருகிறது. அதற்கு உடனடி தீர்வு சொல்லாமல் இஸ்ரேல் நாட்டை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி அசரடித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் தமிழிசை நேற்று காலை 8.30 மணி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பிரச்னை நிலவி வருகிறது. இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச் னை. போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.