சென்னை: மின்தடை ஏற்படும் காலங்களில் விரைவாக செயல்பட்டு, உடனுக்குடன் அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்துறை அமைச்சர் தங்மணி உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தொழிற்சங்கத்தினரும் இதற்கு மின்பற்றாக்குறையே காரணம் என்றும், தரமற்ற பொருட்கள் பயன்படுத்துவதால் தடை ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் வாரியம் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. எவ்விதமான மின்தடையும் இல்லை என்றும் கூறி வருகிறது. இந்நிலையில், அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்ட அமைச்சர் தங்கமணி, மின்தடை ஏற்படும் காலங்களில் விரைவாக செயல்பட்டு, உடனுக்குடன் அதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.