இடைப்பாடி : கொங்கணாபுரம் வாரச்சந்தையில் நேற்று ₹3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் வாரச்சந்தையில், நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 7500 ஆடுகள், 900 பந்தய சேவல், 1100 நாட்டுக்கோழி மற்றும் சேவல் மற்றும் 92 டன் காய்கறி, மற்றும் 13 டன் பலாப்பழம் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தையில் 10 கிலோ எடை கொண்ட செம்மறி மற்றும் வெள்ளாடு ₹4,400 முதல் ₹5,550 வரையும், 20 கிலோ எடையுள்ள ஆடு ₹8600 முதல் ₹11 ஆயிரம் வரையும் விற்பனையானது. பந்தய சேவல் ₹800 முதல் ₹3,000 வரையும், நாட்டுக்கோழி ₹100 முதல் ₹550 வரையும், சேவல் ₹150 முதல் ₹900 வரையும் விற்பனையானது.