நடிகர் சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளில் செய்யாததை 3 ஆண்டில் செய்து காட்டியுள்ளோம் : விஷால்

சென்னை: நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டதில் மகிழ்ச்சி என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னையில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் பேட்டியளித்தனர். இன்னும் 5 மாதத்தில் நடிகர் சங்க கட்டிடம் முழுமை பெறும் என்று தெரிவித்த விஷால், தமிழகம் முழுவதும் நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். நடிகர் சங்க தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று நம்புவதாக விஷால் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை பாண்டவர் அணி நிறைவேற்றியுள்ளதாகவும், நடிகர் சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளில் செய்யாததை 3 ஆண்டில் செய்து காட்டியுள்ளோம் என்று பெருமையுடன் விஷால் தெரிவித்துள்ளார். நாடக நடிகர்கள் அனைவரையும் முறைப்படி நடிகர் சங்கத்தில் சேர்க்கப்படுவர் என்று விஷால் தெரிவித்தார்.நாங்கள் யாரையும் போட்டியாளராக நினைவிக்கவில்லை என்று நாசர் தெரிவித்தார்.

சுவாமி சங்கரதாஸ் அணியினரின் பேட்டி

மதுரையில் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியினர் பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள், நடிகர் சங்க தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும், என்றும், சேலம், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி மற்றும் மதுரையில் வாக்கு சேகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். நாடக நடிகர்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறோம் என்று சுவாமி சங்கரதாஸ் அணியினர் தெரிவித்தனர்.

Related Stories: