சென்னை: மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தில் அரசு அனுமதி இல்லாமல் இயங்கிய 5 மது பார்கள் இழுத்து மூடப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் போலீசார் அதிக பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும், அவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி அதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி, மாவட்டத்தில் இயங்கும் அனுமதி பெறாத பார்களை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டார். இதன்பேரில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அனுமதி பெறாத பார்கள் மூடப்பட்டன. இந்நிலையில் மதுராந்தகம் பகுதியில் படு அமர்க்களமாக செயல்பட்டு வந்த 3 பார்கள், மாம்பாக்கத்தில் 1 பார், கீழ் மருவத்தூரில் 1 பார் என அனைத்தும் மூடப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த இந்த பார்கள் குறித்து பலமுறை காவல் துறையினருக்கு புகார் அளித்து இருந்தோம்.