கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் திறப்பு

சென்னை: சென்னை பீனிக்ஸ் மாலில் வைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டையை முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் திறந்து வைத்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளுக்குட்பட்டு சுமார் 6.6 டன் எடையுடன் 51 அடி உயரத்தில் கிளாஸிக் மால் டெவலப்மென்ட்கம்பெனி கிரிக்கெட் மட்டை ஒன்றை வடிவமைத்துள்ளது. இதனையடுத்து தற்போது பீனிக்ஸ் மாலில் வைக்கப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் மட்டை உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

மேலும் இதற்கான விருது நேற்று வழங்கப்பட்ட நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கபில்தேவ் கலந்துக் கொண்டு விருதினை வழங்கினார். இதனை தொடர்ந்து கிரிக்கெட் மட்டையை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்த கபில்தேவ் அதில் தனது கையெழுத்தையும் பதிவு செய்தார். அப்போது பேசிய அவர் பாகிஸ்தானை விட இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதாகவும் தெரிவித்தார்.

Related Stories: