ரவுடி வல்லரசு என்கவுன்டர் தொடர்பாக விசாரணை அதிகாரியாக மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி நியமனம்

சென்னை : சென்னையில் ரவுடி வல்லரசு என்கவுன்டர் தொடர்பாக விசாரணை அதிகாரியாக பொன்னேரி 2-ம் நீதிமன்ற நடுவர் விஜயலட்சுமி நியமிக்கப்பட்டார். முன்னதாக சென்னை வியாசர்பாடியில் பல கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி வல்லரசு சுட்டு கொலை செய்யப்பட்டார். கைது செய்ய முயன்ற உதவி ஆய்வாளர்களை, வல்லரசு கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. எனினும் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி வல்லரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 2 உதவி ஆய்வாளர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: