தாம்பரம்: கொல்கத்தாவில் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நேற்று தாம்பரத்தில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் பல இடங்களில் மருத்துவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. கொல்கத்தாவில் இளம் மருத்துவர் தாக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இதுபோன்ற செயல்கள் மருத்துவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியின் போது மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.