காவல் சிறார் மன்ற கட்டிடம் திறப்பு

பெரம்பூர்: புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரில் உள்ள காவல் சிறார் மன்ற கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை இடித்துவிட்டு, ₹30 லட்சத்தில் புதிய கட்டிடத்தை சிபிசிஎல் நிறுவனம் கட்டி  கொடுத்தது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. காவல்துறை வடக்கு கூடுதல் ஆணையர் தினகரன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது: படிப்பு நேரம் போக வடசென்னை சிறுவர்கள் இந்த மன்றத்திற்கு வந்து கல்வி சார்ந்த விஷயங்களை பயன்படுத்தி கொள்ளலாம். சிறுவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடாதவாறு  பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும். அவர்களுடைய பழக்க வழக்கங்களை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: