சென்னை: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III, வரித்தண்டலர் நிலை- I, வரைவாளர் மற்றும் நில அளவர் என மொத்தம் 6,491 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக குரூப் 4 தேர்வு எழுதுவதற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III பதவிகளுக்கு, கூடுதலாக தட்டச்சு, சுருக்கெழுத்து தொழில்நுட்பக் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அனைத்து பதவிகளுக்கும் ஒரே விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு எழுதுவோருக்கான குறைந்தபட்ச வயது 18. ஜூலை 14ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.செட்பம்பர் 1ம் தேதி மாவட்ட தலைநகரங்கள், தாலுகா அலுவலங்கள் உள்ள ஊர்கள் என 301 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ெவளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தெரிந்துகொள்ளலாம்.