சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மலை சார்ந்த பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: