லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி தொழிற்சாலைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. லூதியானாவில் நூர்வாலா சாலையில் உள்ள சிவ்புரி பகுதியில் 3 ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 3 அடுக்குகளை கொண்ட இந்த நிறுவனங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் உடனடியாக தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து 16 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பை அடைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன.