கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்: வைரமுத்து கண்டனம்

சென்னை: ரயில்வே அதிகாரிகள் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் பேச வேண்டும் என்ற தெற்கு ரயில்வே உத்தரவுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இருப்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம். ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது ஆட்டின் குரல்வளையைத்தான். கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: