மேற்கு வங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. மேற்கொண்ட பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் கொல்கத்தாவில் பதற்றம் நிலவுகிறது. தேர்தல் வன்முறைகள் மற்றும் கட்சி தொண்டர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் பா.ஜ.க. சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. பேரணி போவ்பசார் என்ற இடத்தை கடந்தபோது சிலர் காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்கினர். இதையடுத்து பேரணியாக சென்றவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் தண்ணீரை பீய்ச்சடித்தும், கண்ணீர்ப் புகை கொண்டு வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர்.