சென்னை: வரலாற்று தகவலின் அடிப்படையிலேயே பேசினேன் என இயக்குநர் பா.ரஞ்சித் தரப்பில் விளக்கம் அளித்துள்ளார். மேலும் எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர் எனவும் கூறினார். எனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல எனவும் குறிப்பிட்டார். நில உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன், உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை என தெரிவித்தார்.