திருவொற்றியூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி மேரி (50). இவர்களது மகன் பாஸ்கர், மணலியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அவரை பார்க்க சில தினங்களுக்கு முன் பாலுவும், மேரியும் சென்னை வந்தனர். மகனை பார்த்து விட்டு நேற்று காலை நெல்லூர் செல்வதற்காக திருவொற்றியூர் ரயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது, அங்கு வந்த ரயிலில் பெண்கள் பெட்டியில் மேரி ஏறினார். அதே பெட்டியில் பாலுவும் ஏற முயன்றார். பெண்கள் பெட்டி என தெரிந்ததும் இறங்கி ஆண்கள் பெட்டியில் ஏறினார். உடனே மேரியும் இறங்கி, கணவர் ஏறிய பெட்டியில் ஏற ஓடி வந்தார்.