ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், கணபதி நகரை சேர்ந்தவர் நிர்மல்குமார் (20). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தேவிகா (65). இவர், வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த 3ம் தேதி தேவிகா, வீட்டு நாய் தெருவில் நின்ற நிர்மல்குமாரை கடித்துள்ளது. பின்னர், 6ம் தேதி அவரது தங்கையையும் அதே நாய் கடித்துவிட்டது.