தனது வசனங்களால் நகைச்சுவை படங்களை ‘ட்ரெண்ட்’ ஆக்கியவர் கிரேஸி மோகன்: திரைப்பட கலைஞர்கள் இரங்கல்

சென்னை: தனது வசனங்களால் நகைச்சுவை படங்களை ‘ட்ரெண்ட்’ ஆக்கியவர் கிரேஸி மோகன் என நடிகர் மனோபாலா இரங்கல் தெரிவித்தார். மிகப்பெரிய வசனகர்த்தாவாக இருந்தாலும் எளிமையின் அடையாளமாக திகழ்ந்தவர் கிரேஸி மோகன் என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்தார். ‘ரோலர் கோஸ்டர்’ போல் நகைச்சுவை வசனங்களை வழங்குவது கிரேஸி மோகனால் மட்டுமே முடியும் என நடிகர் ஸ்ரீமன் கூறினார். மக்கள் முகம்சுளிக்காத வகையில் வசனங்களை எழுதியவர் கிரேஸி மோகன் எனவும், சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தார் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.

Related Stories: