சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை திருவலிக்கேணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயன்(30), புனிதராணி(29), சரண்யா(21) மற்றும் ஜெசினி(6) ஆகிய 4 பேரும் கடந்த 3 நாட்களாக தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு விடுதி அறையினுள் அவர்கள் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளனர். சிறிது நேரத்திற்கு பின் பணி நிமித்தமாக அந்த அறைக்குச் சென்ற விடுதி ஊழியர் ஒருவர், கதவை தட்டியும் திறக்காததால் மாற்று சாவி மூலம் கதவை திறந்து அறையினுள் சென்று பார்த்துள்ளார்.