சென்னை: பெரும்பாலான ஆர்டிஓ அலுவலகங்களில் ஒருமணி நேரத்தில் லைசென்ஸ் வழங்கப்படும் என விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை என 70க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பழகுநர், ஓட்டுநர் உரிமம், ஆர்சி புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்தல், ஆர்சி புத்தகத்தின் நகல் பெறுதல் போன்ற பல்வேறு விதமான பணிகள் நடந்து வருகிறது அவ்வப்போது அலுவலகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வரிசெலுத்துதல், வாகன உரிமை மாற்றம் செய்தல், தகுதிச்சான்று புதுப்பித்தல், தவணை கொள்முதல், தவணை ரத்து போன்ற அனைத்து பணிகளும் இணையதளத்தில் செய்யக்கூடிய வசதி கொண்டுவரப்பட்டது. அதன் ஒருபகுதியாக தற்போது விண்ணப்பதாரர் புகைப்படம் எடுத்த ஒருமணி நேரத்திற்குள் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் அதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநிலத்தின் பல இடங்களில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது.