தமிழக பொதுப்பணித்துறையில் 11 கண்காணிப்பு பொறியாளர் பணியிடம் மாற்றம்: அரசு உத்தரவு

சென்னை,: தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளர் 11 பேருக்கு கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கியும், பணியிட மாற்றம் செய்தும் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருமூர்த்தி அணை கோட்ட செயற்பொறியாளர் வி.ராஜூ நடுகாவிரி வட்ட வடிநில கண்காணிப்பு பொறியாளராகவும், திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்ட செயற்பொறியாளர் ஜி.பொன்ராஜ், திருச்சி மண்டல நீர்வளத்துறை திட்டம் உருவாக்க கண்காணிப்பு பொறியாளராகவும், நாகப்பட்டினம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் எஸ்.ரகுநாதன், ெபரியார், வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

நீர்வளம், நிலவளம் திட்டம் செயற்பொறியாளர் எஸ்.பிரபாகரன் பென்னையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளராகவும், வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் கே.அசோகன் கீழ்காவிரி வட்ட வடிநில கண்காணிப்பு பொறியாளராகவும், நீர்வளத்துறை மாநில திட்ட மேலாண்மை குழு செயற்பொறியாளர் கே.தட்சணாமூர்த்தி சென்னை நிலத்தடி நீர் விவரம் ஆதாரம் குறிப்பு மையம் கண்காணிப்பு பொறியாளராகவும், மாநில நீர்வளத்துறை மேலாண்மை நிறுவன செயற்பொறியாளர் ஆர்.கிருஷ்ணன், நீர்வளம், நிலவள திட்ட கண்காணிப்பு பொறியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கோட்ட செயற்பொறியாளர் டி.ஞானமூர்த்தி, சென்னை மண்டல மருத்துவ கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணி பொறியாளராகவும், நாகப்பட்டினம் திட்ட செயலாக்க பிரிவு கோட்ட செயற்பொறியாளர் எஸ்.ஞானசேகரன், கீழ்வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பவானி கோட்ட செயற்பொறியாளர் ஏ.ஜெயகோபால், மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு வழங்கி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: