சென்னை: வழிகாட்டி மதிப்பு குளறுபடியை சரி செய்யாமல் 13 ஆயிரம் கோடி வருவாயை எட்டுவது எப்படி? என்பது தொடர்பாக நாளை ஆலோசனை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பதிவுத்துறை சார்பில் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் வருவாய் இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் பதிவுத்துறை ஐஜி தலைமையில் டிஐஜி, மாவட்ட பதிவாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. இருப்பினும் பிரச்சனைகளில் முழுமையான தீர்வு ஏற்படவில்லை என்று ஊழியர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். குறிப்பாக, வழிகாட்டி மதிப்பு குளறுபடி காரணமாக தற்போது வரை கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதற்கு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.