சேலம்: அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடியில் பேட்டியளித்தார். ராஜன் செல்லப்பா பேட்டியை முழுமையாக பார்த்த பின்பே கருத்து கூற முடியும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். அதிமுக பலம் பொருந்திய கட்சி என்று தெரிவித்த முதலமைச்சர், அதிமுக தொண்டர்களால் ஆளப்படும் கட்சி என்று தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம்; அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
முன்னதாக ஆவணி பேரூர் பகுதியில் சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் மற்றும் அரசு அலுவலக கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். சரபங்கா நதியின் குறுக்கே பாலம் திறக்கப்பட்டதால், ஒன்றரை கி.மீ சுற்றி சென்ற மருத்துவமனைக்கு தற்போது இரண்டு பர்லாங் கடந்தால் போதும் என்றும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். மக்கள் வைக்கும் கோரிக்கையின்படியே பாலங்கள் கட்டப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.
ராஜன் செல்லப்பா போர்க்கொடிஅதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்று மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு பேட்டியளித்தார். மேலும் பேசிய அவர் அதிமுக பொதுக்குழுவை உடனே கூட்ட ராஜன் செல்லப்பா வலியுறுத்தினார். கட்சியில் அதிகாரம் படைத்த ஒருவர் அதிமுகவுக்கு தலைமையேற்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது அதிமுகவில் யாருக்கும் இல்லை என்று ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ். விளக்கம்அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் போர்க்கொடி பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். ராஜன் செல்லப்பாவின் பேட்டியை முழுமையாக பார்த்த பின்பு கருத்து கூறுவதாக கூறியுள்ளார்.