அரக்கோணம்: அரக்கோணத்தில் கடற்படை விமான தளத்தில் ஹெலிகாப்டர் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவு விழா நடைபெற்றது. கோவா கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் பிலிபோஸ் ஜார்ஜ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பேசினார். இந்திய விமான பாதுகாப்பு படையில் ஹெலிகாப்டரின் எண்ணிக்கை அடுத்த 10 நாட்களில் 500-ஆக உயர்த்தப்படும் என கூறினார். அரக்கோணத்தில் 7 கடற்படை விமானிகளுக்கு 21 வாரங்கள் ஹெலிகாப்டர் பயிற்சி வழங்கப்பட்டது.